search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுகுளத்தூர் கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.16 லட்சம் மோசடி
    X

    முதுகுளத்தூர் கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.16 லட்சம் மோசடி

    முதுகுளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் தலைவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இந்த வங்கியின் தலைவராக மாடசாமி இருந்து வந்தார். அப்போது 17 பயனாளிகளுக்கு ஆடுகள் ரூ.16 லட்சத்து 15 ஆயிரம் வழங்கியதாக போலி தஸ்தாவேஜுகள் மூலம் மோசடி நடந்துள்ளதாக வங்கியின் தற்போதைய தலைவர் சங்கரபாண்டியன் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×