search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன் கட்சி தொடங்கி நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவு - கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றுகிறார்
    X

    கமல்ஹாசன் கட்சி தொடங்கி நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவு - கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றுகிறார்

    கமல்ஹாசன் கட்சி தொடங்கி நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவு பெறுவதால், முதல் ஆண்டு நிறைவு நாளான நாளை காலை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றுகிறார். #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

    கட்சி தொடங்கி நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சென்னையில் எளிய விழா நடத்த ஏற்பாடு செய்து உள்ளனர்.

    முதல் ஆண்டு நிறைவு நாளான நாளை காலை 7.30 மணிக்கு கமல்ஹாசன் கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றுகிறார். பின்னர் 9 மணிக்கு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் என்ற பகுதிக்கு சென்று மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்குகிறார்.

    அதன் பின்னர் திருவாரூரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    Next Story
    ×