search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே வேலைக்கு சென்ற 2 பெண்கள் மாயம்
    X

    மதுரை அருகே வேலைக்கு சென்ற 2 பெண்கள் மாயம்

    மதுரை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண்கள் மாயமானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மேலூர் அருகே உள்ள சேக்குப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் காளீஸ்வரி (வயது17).

    இவர் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள சித்தப்பா வெய்யமுத்து (30) வீட்டில் தங்கி கூத்தியார்குண்டு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    தினமும் வீட்டில் இருந்து பஸ்சில் காளீஸ்வரி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 15-ந்தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் காளீஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காளீஸ்வரியை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்....

    டி.குன்னத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (25) தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 15-ந்தேதி திடீரென மாயமானார்.

    இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×