search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரையாம்புத்தூரில் பணி இடமாற்றம் செய்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கரையாம்புத்தூரில் பணி இடமாற்றம் செய்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    கரையாம்புத்தூரில் பணி இடமாற்றம் செய்ததால் வாலிபர் தூக்கு போட்டு சாவு

    பாகூர்:

    கரையாம்புத்தூரில் வேறு இடத்துக்கு பணி இடமாற்றம் செய்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கரையாம்புத்தூர் மணமேடு கிராமம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 53). தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் மணிகண்டன் (25). என்ஜினீயரிங் படித்து விட்டு மணமேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டனை சென்னையில் உள்ள கம்பெனிக்கு பணியிட மாற்றம் செய்தனர். இதில் மணிகண்டனுக்கு விருப்பம் இல்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே ஊருக்கு வந்த மணிகண்டன் தனது பழைய வீட்டுக்கு சென்று நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வைத்திலிங்கம் மணிகண்டனை காணவில்லை என தேடி பழைய வீட்டுக்கு சென்றார். அங்கு மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கரையாம்புத்தூர் போலீசில் புகார் செய்தார். உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×