search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாய்பாபா காலனியில் பியூட்டி பார்லரில் பணம் திருட்டு
    X

    சாய்பாபா காலனியில் பியூட்டி பார்லரில் பணம் திருட்டு

    சாய்பாபா காலனியில் பியூட்டி பார்லரில் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 25). இவர் என்.எஸ்.ஆர். ரோட்டில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பார்லரை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் திறப்பதற்காக வந்தார். அப்போது பார்லரின் சட்டர் உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ரேஷ்மா கடையின் உள்ளே சென்று பார்த்தார். இரவு பார்லருக்குள் நுழைந்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்த ரூ.24 ஆயிரம் பணம், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து ரேஷ்மா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    Next Story
    ×