search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ்காரர் முகத்தில் மயக்க மருந்து அடித்த கொள்ளையனிடம் இருந்து 87 பவுன் நகை, ரூ.3 லட்சம் மீட்பு
    X

    போலீஸ்காரர் முகத்தில் மயக்க மருந்து அடித்த கொள்ளையனிடம் இருந்து 87 பவுன் நகை, ரூ.3 லட்சம் மீட்பு

    ஆலந்தூர் அருகே போலீஸ்காரர் முகத்தில் மயக்க மருந்து அடித்த கொள்ளையனிடமிருந்து 87 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர்.
    ஆலந்தூர்:

    சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம் (34). இவர் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்தான்.

    எனவே இவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அதைஅறிந்த அவன் திருப்பூரில் பதுங்கி இருந்தான். கடந்த 1-ந்தேதி மடிப்பாக்கம் டான்சி நகரில் கொள்ளையடிக்க வந்த அவன் அங்கு சுற்றித் திரிந்தான்.

    அப்போது அவனை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் விஜயகாந்த் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து விட்டு தப்பி ஓட முயன்றான். அவனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவனிடம் விசாரித்த போது கொள்ளையடித்த நகைகளை கோவையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்றதாக தெரிவித்தான். உடனே அங்கு சென்ற போலீசார் 87 பவுன் நகைகளை மீட்டனர்.

    மேலும் ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு லேப்- டாப், காமிரா, செல்போன் மற்றும் ஒரு விலை உயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த காரில் சென்று தான் கொள்ளையில் இவன் ஈடுபட்டு வந்தான். கைது செய்யப்பட்ட இவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். #tamilnews
    Next Story
    ×