என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ்காரர் முகத்தில் மயக்க மருந்து அடித்த கொள்ளையனிடம் இருந்து 87 பவுன் நகை, ரூ.3 லட்சம் மீட்பு
Byமாலை மலர்9 Feb 2019 10:05 AM GMT (Updated: 9 Feb 2019 10:05 AM GMT)
ஆலந்தூர் அருகே போலீஸ்காரர் முகத்தில் மயக்க மருந்து அடித்த கொள்ளையனிடமிருந்து 87 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர்.
ஆலந்தூர்:
சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம் (34). இவர் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்தான்.
எனவே இவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதைஅறிந்த அவன் திருப்பூரில் பதுங்கி இருந்தான். கடந்த 1-ந்தேதி மடிப்பாக்கம் டான்சி நகரில் கொள்ளையடிக்க வந்த அவன் அங்கு சுற்றித் திரிந்தான்.
அப்போது அவனை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் விஜயகாந்த் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து விட்டு தப்பி ஓட முயன்றான். அவனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவனிடம் விசாரித்த போது கொள்ளையடித்த நகைகளை கோவையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்றதாக தெரிவித்தான். உடனே அங்கு சென்ற போலீசார் 87 பவுன் நகைகளை மீட்டனர்.
மேலும் ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு லேப்- டாப், காமிரா, செல்போன் மற்றும் ஒரு விலை உயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த காரில் சென்று தான் கொள்ளையில் இவன் ஈடுபட்டு வந்தான். கைது செய்யப்பட்ட இவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். #tamilnews
சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம் (34). இவர் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்தான்.
எனவே இவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதைஅறிந்த அவன் திருப்பூரில் பதுங்கி இருந்தான். கடந்த 1-ந்தேதி மடிப்பாக்கம் டான்சி நகரில் கொள்ளையடிக்க வந்த அவன் அங்கு சுற்றித் திரிந்தான்.
அப்போது அவனை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் விஜயகாந்த் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து விட்டு தப்பி ஓட முயன்றான். அவனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவனிடம் விசாரித்த போது கொள்ளையடித்த நகைகளை கோவையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்றதாக தெரிவித்தான். உடனே அங்கு சென்ற போலீசார் 87 பவுன் நகைகளை மீட்டனர்.
மேலும் ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு லேப்- டாப், காமிரா, செல்போன் மற்றும் ஒரு விலை உயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த காரில் சென்று தான் கொள்ளையில் இவன் ஈடுபட்டு வந்தான். கைது செய்யப்பட்ட இவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X