search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.கே.நகர்-ராம்ஜிநகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    கே.கே.நகர்-ராம்ஜிநகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    கே.கே.நகர் மற்றும் ராம்ஜிநகர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
    திருச்சி:

    திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது:-

    கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை)  நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கே.கே.நகர், இந்தியன்பேங்க் காலனி, எஸ்.எம்.இ.எஸ்.சி. காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனிநகர், முல்லைநகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லெஸ்ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜர்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர்,  ஆனந்த்நகர், கே.சாத்தனூர்,  ஓலைïர், வடுகப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, காஜாநகர், சிம்கோகாலனி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். 

    இதைப்போல் அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை 7-ந் தேதி பராமரிப்புகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சார பெறும் பகுதிகளான ராம்ஜிநகர்,  கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், நவ லூர் குட்டபட்டு, சத்திரப்பட்டி, புதுக்குளம், பூலாங்குளத்துபட்டி, அம்மாபேட்டை, இனாம்புத்தூர், வெள்ளிவாடி, ஆலம்பட்டிபுதூர், சித்தாநத்தம், வடசேரி, கரையான்பட்டி, சமுத்திரம், இடையப்பட்டி, மறவனூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×