என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் கடைக்குள் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்3 Feb 2019 10:22 AM GMT (Updated: 3 Feb 2019 10:22 AM GMT)
மதுரையில் செல்போன் கடை மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மதுரை:
மதுரை தத்தனேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் செய்யது (வயது 32). இவர் கோகலே ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் செய்யது கடையை அடைத்துச் சென்றார். மறுநாள் காலை கடைக்கு வந்த அவர் பொருட்கள் சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடையின் மேற்கூரையை பிரித்து யாரோ உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து தல்லாகுளம் போலீசில், செய்யது புகார் செய்தார். கடையின் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கொள்ளை போயிருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார்.
கொள்ளை போன பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X