search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 27 ஆசிரியர்கள் சஸ்பெண்டு
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 27 ஆசிரியர்கள் சஸ்பெண்டு

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற மேலும் 27 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். #JactoGeo
    திண்டுக்கல்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 3228 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு மற்றும் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 38 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அதில் கைது செய்யப்பட்ட 27 ஆசிரியர்களின் பெயர் பட்டியலை காவல் துறையினர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்தனர்.

    அதன்படி கைது செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்களான செல்லக்குட்டியூரைச் சேர்ந்த மணிகண்டன், தேவிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜன், வெறியம்பட்டியைச் சேர்ந்த அண்ணாத்துரை உள்பட 27 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 36 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JactoGeo

    Next Story
    ×