search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருங்குடி குப்பையில் கை, கால் மீட்பு- துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்?
    X

    பெருங்குடி குப்பையில் கை, கால் மீட்பு- துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்?

    பெருங்குடி குப்பையில் கை, கால் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிக்கரணை:

    பெருங்குடி பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நேற்று மாலை கோடம்பாக்கம், பவர்அவுஸ் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை லாரியில் கொண்டு சென்று தொழிலாளர்கள் அங்கு கொட்டினர்.

    அப்போது குப்பையுடன் பெண்ணின் துண்டிக்கப்பட்ட வலது கை மற்றும் 2 கால்கள் தனித்தனியாக விழுந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் துண்டிக்கப்பட்ட கை, 2 கால்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த கையில் ‘டிராகன்’ படம், மற்றும் சிவன்-பார்வதி உருவம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. கால் விரலில் மெட்டி காணப்பட்டது.

    மர்ம கும்பல் அவரை கடத்தி சென்று துண்டு, துண்டாக வெட்டி குப்பையில் வீசி உள்ளனர். கொலையுண்ட பெண்ணின் தலை மற்றும் மற்ற உடல் பாகங்கள் இதுவரை சிக்கவில்லை. அதனை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோடம்பாக்கம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பையில் பெண்ணின் கை, கால் கிடந்தததால் அவர் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த வாரத்தில் மாயமான பெண்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர்.

    கொலையுண்ட பெண்ணை அடையாளம் காண்பது போலீசாருக்கு பெரிய சவாலாக உள்ளது.
    Next Story
    ×