என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடையாலுமூடு அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம்
நாகர்கோவில்:
கடையாலுமூடு ஆம்பாடி பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன். இவரது மனைவி சாஜினி (வயது 35). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், மகளும் உள்ளனர். மணிகண்டன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி சாஜினி தனது மோட்டார் சைக்கிளில் கடையாலுமூட்டில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வங்கிக்கு சென்ற சாஜினி வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடி வங்கிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வெளிநாட்டில் உள்ள மணி கண்டனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடையாலுமூடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர். உறவினர்களும் மாயமான சாஜினியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்