என் மலர்
நீங்கள் தேடியது "missing mother"
நாகர்கோவில்:
கடையாலுமூடு ஆம்பாடி பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன். இவரது மனைவி சாஜினி (வயது 35). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், மகளும் உள்ளனர். மணிகண்டன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி சாஜினி தனது மோட்டார் சைக்கிளில் கடையாலுமூட்டில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வங்கிக்கு சென்ற சாஜினி வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடி வங்கிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வெளிநாட்டில் உள்ள மணி கண்டனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடையாலுமூடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர். உறவினர்களும் மாயமான சாஜினியை தேடி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி நவீனா (வயது 24). இவர்களுக்கு பிரதிக்ஷா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் குழந்தை பிரதிக்ஷாவுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவளை நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறேன் என நவீனா தனது கணவர் வீரமணியிடம் கூறினார். பின்னர் குழந்தை பிரதிக்ஷாவுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இரவுவரை வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சியடைந்த வீரமணி உறவினர்கள் மற்றும் பல இடங்களில் மனைவி மற்றும் குழந்தையை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து வீரமணி ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குபதிவு செய்து மாயமான நவீனா மற்றும் குழந்தை பிரதிக்ஷாவை தேடி வருகிறார்.






