search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
    X

    செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

    செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் குமரவேல் (20). இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இன்று காலை நண்பர்கள் 20 பேருடன் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப் பார்க்க வந்தார். ஐந்து கண் மதகு அருகே வந்த போது கால் தடுமாறி ஏரிக்குள் விழுந்தார்.

    உடனே குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூந்தமல்லியில் இருந்து தீயணைப்பு துறை ஊழியர்களும் வந்தனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார். அதன் பின்னர் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    Next Story
    ×