search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ரெயிலில் அடிபட்டு இளம்பெண் பலி
    X

    கோவையில் ரெயிலில் அடிபட்டு இளம்பெண் பலி

    கோவை கணபதி டெக்ஸ்டூல்ஸ் பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கணபதி டெக்ஸ்டூல்ஸ் பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று ரெயிலில் அடிபட்டு இறந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிப்பட்டு இறந்த இளம்பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×