search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மணல் கடத்தல்- வாலிபர் கைது
    X

    பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மணல் கடத்தல்- வாலிபர் கைது

    பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே தும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்துவதாக பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது, மணல் கடத்தி வந்த டிராக்டரை மடக்கிப் பிடித்தனர். டிராக்டரை ஓட்டி வந்த தும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணனை கைது செய்தனர். அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நீர் நிலைகளில் மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
    Next Story
    ×