என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளகிரி அருகே சமையல் தொழிலாளி மனைவி தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்3 Jan 2019 12:22 PM GMT (Updated: 3 Jan 2019 12:22 PM GMT)
சூளகிரி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏரியபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் காரராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மாணிக்கம் (வயது26) இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
கணவன் - மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணிக்கம் இன்று அதிகாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X