search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூளகிரி அருகே சமையல் தொழிலாளி மனைவி தூக்குபோட்டு தற்கொலை
    X

    சூளகிரி அருகே சமையல் தொழிலாளி மனைவி தூக்குபோட்டு தற்கொலை

    சூளகிரி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏரியபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் காரராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மாணிக்கம் (வயது26) இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. 

    கணவன் - மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணிக்கம் இன்று அதிகாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×