என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டல் படிக்கட்டில் தவறி விழுந்ததில் லாட்ஜ் உரிமையாளர் பலி
Byமாலை மலர்2 Jan 2019 6:18 PM GMT (Updated: 2 Jan 2019 6:18 PM GMT)
திருப்பூர் ராயபுரம் அருகே ஓட்டல் படிக்கட்டில் தவறி விழுந்து லாட்ஜ் உரிமையாளர் பலியானார்.
திருப்பூர்:
திருப்பூர் ராயபுரம் எல்.ஆர்.ஜி. லே அவுட் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 48). இவர் காதர்பேட்டையில் சொந்தமாக லாட்ஜ் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுரேஷ் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். நள்ளிரவில் வீட்டுக்கு வருவதற்காக ஓட்டல் படிக்கட்டில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. அதில் அவருக்கு பின்னந்தலையில் அடிபட்டு மயங்கி சரிந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து பார்த்து விட்டு சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புத்தாண்டையொட்டி ஓட்டல் படியில் தவறி விழுந்து லாட்ஜ் உரிமையாளர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ராயபுரம் எல்.ஆர்.ஜி. லே அவுட் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 48). இவர் காதர்பேட்டையில் சொந்தமாக லாட்ஜ் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுரேஷ் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். நள்ளிரவில் வீட்டுக்கு வருவதற்காக ஓட்டல் படிக்கட்டில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. அதில் அவருக்கு பின்னந்தலையில் அடிபட்டு மயங்கி சரிந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து பார்த்து விட்டு சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புத்தாண்டையொட்டி ஓட்டல் படியில் தவறி விழுந்து லாட்ஜ் உரிமையாளர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X