search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் - அதிமுகவினர் விண்ணப்பிக்க அழைப்பு
    X

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் - அதிமுகவினர் விண்ணப்பிக்க அழைப்பு

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிற தொண்டர்கள் நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. #ThiruvarurByElections #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-



    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிற தொண்டர்கள் 2-ந்தேதி (நாளை) காலை 9.30 மணி முதல் 3-ந்தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்தொகையான ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை 4-ந்தேதி நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   #ThiruvarurByElections #ADMK
    Next Story
    ×