search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம் அருகே கல்லூரி மாணவி- வாலிபர் தற்கொலை
    X

    குன்னம் அருகே கல்லூரி மாணவி- வாலிபர் தற்கொலை

    குன்னம் அருகே பல்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவி மற்றும் வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் ஷீலா (வயது18) . இவர் பெரம்பலூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் வயிற்று வலி காரணமாக ஷீலா வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மருவத்தூர் போலீஸ் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் அருண்குமார் (20). இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருண்குமாரின் தாய் மற்றும் சகோதரர் இறந்துவிட்டனர்.

    இதனால் மனமுடைந்த அருண்குமார் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×