search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து திருடிய வாலிபர் கைது
    X

    செங்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து திருடிய வாலிபர் கைது

    செங்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ. 1½ லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    செங்குன்றம்:

    சோழவரம் காரனோடை நாரணம்பேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 22-ந் தேதி செங்குன்றத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். அவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதேப்போல் செங்குன்றத்தை சேர்ந்த மின் ஊழியர் யுகேந்திரனின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.

    குற்றவாளிகளை பிடிக்க புழல் உதவி கமிஷனர் வெங்கடேசன் மேற்பார்வையில், சப்-இன்ஸ் பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையில் ஈடுபட்டது திருவொற்றியூர் இந்திரா நகர் பேசின் சாலையை சேர்ந்த கருணாகரன் (38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ரூ.1½லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கருணாகரனை போலீசார் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×