என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரரின் செல்போனை பறித்து லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சியை அழித்த போக்குவரத்து காவலர்
Byமாலை மலர்26 Dec 2018 10:22 AM GMT (Updated: 26 Dec 2018 10:22 AM GMT)
நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரரின் செல்போனை பறித்து லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சியை போக்குவரத்து காவலர் அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர்:
மணலி எம்.எப்.எல். ஜங்சன் அருகே போக்குவரத்து போலீஸ்காரர் செந்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது விதிமுறை மீறிவந்த வாகன ஓட்டிகளிடம் அவர் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.
அந்த நேரத்தில் அங்கு வந்த எண்ணூர் நுண்ணறிவு பிரிவில் போலீஸ்காரர் வேலைபார்க்கும் வெற்றி என்பவர் இந்த காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
இதனை கவனித்த போலீஸ்காரர் செந்தில், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வெற்றி வைத்திருந்த செல்போனை பறித்து அதில் பதிவாகி இருந்த தான் லஞ்சம் வாங்கும் வீடியோவை அழித்தார். பின்னர் செல்போனையும் உடைத்து எறிந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெற்றி, நுண்ணறிவு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X