search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைபயணம்
    X

    கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைபயணம்

    இண்டூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபயணம் மேற்கொண்டனர்.
    இண்டூர்:

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, மேற்கொண்ட நடைபயணம் ஒரு பகுதியாக இண்டூர் ராமர்கூடலில் இருந்து பரப்பட்டி, பங்குநத்தம், பண்டஅள்ளி, ராஜாகொல்லள்ளி, சோமனஅள்ளி, மல்லாபுரம், தளவாய்அள்ளி, சிறுகலூர், பழைய இண்டூர் ஆகிய கிராமங்கள் வழியாக 30-க்கும் மேற்பட்டோர் 20 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.

    இறுதியாக, இண்டூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் நடை பயணத்தை முடித்து வைத்து பேசினார். நடை பயணத்தின்போது, தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரண பணிகளை செய்ய வேண்டும். காவிரி ஆற்றின் உபரி நீரை மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்பி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். இண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    முன்னதாக இந்த நிகழ்சிக்கு பகுதி செயலாளர் அப்புனு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லையன் நடை பயணத்தை தொடங்கி வைத்தார்.
    Next Story
    ×