என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தரிடம் பணம் பறித்த கணவன்-மனைவி கைது
Byமாலை மலர்19 Dec 2018 2:22 PM GMT (Updated: 19 Dec 2018 2:22 PM GMT)
ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தரிடம் பணம் பறித்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் உள்ள கழிவறை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இளம் தம்பதியினர் பேச்சு கொடுத்துள்ளனர். திடீரென்று அவர்கள் ரமேசின் சட்டை பையில் இருந்த பணத்தினை எடுத்து தப்பியோட முயன்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் இளம்தம்பதியினரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து ரமேசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் இருவரும் கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (24), அவரது மனைவி பொன்னி (23) என்பது தெரியவந்தது. 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X