search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீஞ்சூர் அருகே ஆற்றின் கரையை உடைத்து மணல் திருட்டு - வாலிபர் கைது
    X

    மீஞ்சூர் அருகே ஆற்றின் கரையை உடைத்து மணல் திருட்டு - வாலிபர் கைது

    மீஞ்சூர் அருகே ஆற்றின் கரையை உடைத்து மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த சீமாவரம் ஆற்றில் ஆற்றின்கரையை உடைத்து ஆற்றுப்பாலத்தின் அடியில் மணல் எடுப்பதாக மீஞ்சூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர்ம நபர்கள் மணல் அள்ளிகொண்டிருப்பது தெரியவந்தது.

    போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருவரை மட்டும் மடக்கினர்.

    விசாரணையில் அவர் பொன்னேரி அடுத்த சோமஞ்சேரியைச் சேர்ந்த நாகராஜ் (26) என்பது தெரிந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.

    தப்பி ஓடிய மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரையை சேர்ந்த சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×