search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றக்கோரி டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பு - விக்கிரமராஜா
    X

    ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றக்கோரி டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பு - விக்கிரமராஜா

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றக்கோரி டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார்.

    சென்னை:

    அகில இந்திய வணிகர் சம்மேளனம் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி டெல்லியில் பேரணி நடத்த உள்ளனர்.

    இந்த பேரணியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதுகுறித்து பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தடை விதிக்க கோரியும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர்கள் போராடி வருகிறார்கள்.

    மத்திய - மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை. இதை கண்டித்து நாடு தழுவிய அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் பேரணி 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில் தமிழ்நாட்டில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் சென்று பங்கேற்கிறார்கள். புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அந்தமான், லட்சத் தீவு ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்கின்றனர்.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தென்மண்டல கூட்டம் நடத்தப்பட்டு 3 நாள் தொடர் கடை அடைப்பு போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×