search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு
    X

    காங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு

    காங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.
    காங்கேயம்:

    காங்கயம் பழையகோட்டை சாலையில் உள்ள நாட்டார்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (வயது 40) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையத்திற்கு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டார்.

    நேற்றுகாலை 8 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டு முன்பு இருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்களில் இருந்த துணி, பொருட்களை வெளியே எடுத்து வீசப்பட்டிருந்தது. மேலும் நகை பணம் ஏதும் கிடைக்காததால், கட்டிலில் இருந்த மெத்தையை அகற்றி இதன் அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். 
    Next Story
    ×