search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் 41 போலீசார் இடமாற்றம்- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் 41 போலீசார் இடமாற்றம்- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

    விழுப்புரம் மாவட்டத்தில் 41 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சூரியநாராயணன் மயிலம் போலீஸ் நிலையத்திற்கும், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு மஞ்சுளா உளுந்தூர்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏட்டுகள் ராஜதுரை திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், காளிதாசன் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், ராஜேந்திரன் கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கும், ஆரோக்கியதாஸ் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், கண்ணன் சங்கராபுரத்திற்கும், போலீஸ்காரர்கள் ரவி கீழ்குப்பத்திற்கும், சக்திவேல் வளவனூருக்கும், ராமலிங்கம் கரியாலூருக்கும், வசந்தராஜன், ரமேஷ் ஆகியோர் திருவெண்ணைநல்லூருக்கும், பசுபதி மரக்காணத்திற்கும், பூங்கொடி ஒலக்கூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதேபோல் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் 5 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணியாற்றி வந்த சுரேஷ், பிரகாஷ்குமார், சத்தியநாராயணன், சுபாஷ், சரவணன், கோபிநாதன், செல்வத்துரை உள்ளிட்ட 27 பேர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார். 

    Next Story
    ×