search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவியை கடத்தி பாலியல் கொடுமை- 2 வாலிபர்கள் கைது
    X

    மாணவியை கடத்தி பாலியல் கொடுமை- 2 வாலிபர்கள் கைது

    வாட்ஸ் அப் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் மாணவியை கடத்தி பாலியல் கொடுமை செய்த 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    காசிமேட்டை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த மாணவிக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் மோகன் (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்தவர்.

    இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி மாணவி மாயம் ஆனார். இது குறித்து மாணவியின் தாயார் காசிமேடு போலீசில் புகார் செய்தார்.

    காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தார். இந்த நிலையில் 9-ந்தேதி மாணவி மாதவரம் பஸ் நிலையத்தில் மீட்கப்பட்டார். விசாரணையில் மாணவி கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.

    மாணவியிடம் பழகிய வாலிபர் மோகன், 8-ந்தேதி அதிகாலை மாணவியை ஆந்திர மாநிலம் ரேணி குண்டாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதற்கு அவருடைய நண்பர் விஜய் என்பவர் உறுதுணையாக இருந்துள்ளார்.

    ரேணிகுண்டாவில் விஜய்க்கு சொந்தமான வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று மோகன், பாலியல் கொடுமை செய்துள்ளார். பின்னர் மாணவியை மாதவரம் பஸ் நிலையத்தில் கொண்டு விட்டுவிட்டு தப்பிவிட்டார்.

    இந்த தகவலை போலீசாரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் ஆந்திரா சென்று மாணவியை பாலியல் கொடுமை செய்த வாலிபர் மோகன், இதற்கு உறுதுணையாக இருந்த வாலிபர் விஜய் ஆகியோரை பிடித்து வந்தனர்.

    அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனம் அம்மாள், போக்சோ சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அதை தொடர்ந்து மோகன், விஜய் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    Next Story
    ×