search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெருக்களில் தேங்கிக்கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்
    X

    தெருக்களில் தேங்கிக்கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்

    எஸ்.பட்டினம் ஊராட்சியில் தெருக்களில் தேங்கிக்கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தொண்டி:

    திருவாடானை யூனியன் எஸ்.பி.பட்டினம் ஊராட்சியில் 9 வார்டுகளும், 25-க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. இங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அடிப்படை சுகாதாரம் பாதுகாக்கப்படாத நிலையில் தொற்று நோய்களின் பிறப்பிடமாக இருந்து வருகிறது.

    இதனால் அடிக்கடி டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகமது முக்தார் கூறியதாவது:- திருவாடானை யூனியனில் எஸ்.பி.பட்டினம் ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். இதனால் இங்கு அதிகஅளவில் குப்பைகள் சேருவது வழக்கம். இந்த குப்பைகளை சேகரிக்க தினமும் துப்புரவு பணியாளர்கள் வீதி வீதியாக சென்றால் பொதுமக்கள் தெருவில் கொட்டாமல் பணியாளர்களிடம் கொடுப்பார்கள்.

    ஆனால் இந்த ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததுடன் குப்பைகளை சேகரிக்க வாகனங்களும் இல்லாமல் உள்ளது. இதனால் தூய்மை காவலர்கள் இங்குள்ள குப்பைகளை சேகரிக்க வாரம் ஒரு முறைதான் ஒரு வீதிக்கு வருகின்றனர். இதன் காரணமாக வீடுகளில் சேரும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி விடுகின்றனர். குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டிய ஊராட்சி நிர்வாகம் அதனை சரியாக செய்வதில்லை.

    இனிமேல் அதிகாரிகளை நம்பி பயனில்லை என்பதால் எஸ்.பி.பட்டினத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்துவரும் பொது நல சங்கங்கள் மூலம் குப்பைகளை சேகரித்து அப்புற படுத்தவும், பொதுசுகாதாரத்தை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். மாவட்ட கலெக்டர் எஸ்.பி.பட்டினத்திற்கு நேரில் வந்து இங்குள்ள அடிப்படை சுகாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×