search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு சூளையில் தறிப்பட்டறை தொழிலாளி தற்கொலை
    X

    ஈரோடு சூளையில் தறிப்பட்டறை தொழிலாளி தற்கொலை

    ஈரோடு சூளையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு சூளையை அடுத்த காவிரி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 49) தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி பூவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகளிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றும் மூர்த்தி வழக்கம்போல் குடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென படுக்கை அறைக்கு சென்ற மூர்த்தி கதவை தாள்போட்டு தூக்கில் தொங்கினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பூவதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×