search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக அவதூறு- 3 பேர் கைது
    X

    சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக அவதூறு- 3 பேர் கைது

    சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரத்தில் ஒரு அமைப்பு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சிலர் பேசி முழக்கமிட்டனர்.

    சாதிகளை விமர்சிக்கும் வகையிலும் கருத்துக்களை தெரிவித்தனர். இது வாட்ஸ்- அப், மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவந்தது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. திருவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த 4 பேர் இதை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாலமன், அன்பரசு, வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அன்பழகன் என்பவரை தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×