என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விருதுநகரில் கியாஸ் ஏஜென்சி ஊழியரிடம் ரூ.6 லட்சம் அபேஸ்
விருதுநகர்:
விருதுநகர் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவர் சிவகாசி சாலையில் உள்ள கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு வசூல் பணம் ரூ.6 லட்சத்தை எடுத்துக் கொண்டு ராமச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
வீட்டுக்கு சென்றதும் மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்தபோது, அதில் வைத்திருந்த பணப்பை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். நிறுவனத்தில் இருந்து கிளம்பிய நான், சேதப்பட்டு திடல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி சில பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பியதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் விருதுநகர் மருதநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நாகஜோதி (37). இவர், தனது மாமியார் வீடு சென்று ரூ.50 ஆயிரம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் தான் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்று விட்டதாக ஆமத்தூர் போலீசில் நாகஜோதி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்