என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்தி வேலூரில் கார் மோதி லாரி கிளீனர் பலி - வியாபாரி உள்பட 2 பேர் படுகாயம்
Byமாலை மலர்28 Nov 2018 6:12 PM GMT
பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற லாரி கிளீனர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற லாரி கிளீனர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கார் கவிழ்ந்ததில் வியாபாரி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 54), லாரி கிளீனர். இவர் நேற்று கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் பிரிவு சாலை அருகே நடந்து சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற கார் ரவிக்குமார் மீது மோதியது. இதில் ரவிக்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தில் கார் சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் காரில் வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (51), மாதேஸ்வரன் (59) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். 2 பேரும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் வந்த நெடுஞ்செழியன் உர வியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரம் சம்பந்தமாக நாமக்கல் வந்த போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் ரவிக்குமாரின் உடலை மீட்டு பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற லாரி கிளீனர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கார் கவிழ்ந்ததில் வியாபாரி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 54), லாரி கிளீனர். இவர் நேற்று கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் பிரிவு சாலை அருகே நடந்து சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற கார் ரவிக்குமார் மீது மோதியது. இதில் ரவிக்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தில் கார் சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் காரில் வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (51), மாதேஸ்வரன் (59) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். 2 பேரும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் வந்த நெடுஞ்செழியன் உர வியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரம் சம்பந்தமாக நாமக்கல் வந்த போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் ரவிக்குமாரின் உடலை மீட்டு பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X