என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணல் கடத்தல் லாரி மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்26 Nov 2018 4:20 PM GMT (Updated: 26 Nov 2018 4:20 PM GMT)
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கரூர்
கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஆத்தூர் பிரிவு சாலையில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை பாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். ஈரோடு சாலையில் கரூர் அடுத்த காயத்திரி நகர் அருகே சென்ற போது பின்னால் வந்த மணல் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி லாரி டிரைவரை கைது செய்தனர்.
விசாரணையில் லாரியில் இருந்தது கடத்தல் மணல் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X