search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதிப்பு மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் - நடிகர் விவேக்
    X

    கஜா புயல் பாதிப்பு மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் - நடிகர் விவேக்

    கஜா புயல் பாதிப்பில் மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். #Gajastorm #ActorVivek

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடிகர் விவேக், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை ஒரு லாரியில் நேற்று கொண்டு வந்தார். அவற்றை கலெக்டர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் இது குறித்து நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பேரிடர்களால் பாதிக்கப்படும் பொதுமக்களை அரசுதான் முழு நிவாரணம் வழங்கி மீட்க முடியும். அதற்காக நிவாரண உதவி செய்ய முன்வரும் சமூக ஆர்வலர்களை உதாசீனப்படுத்த கூடாது. அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.

     


    இயற்கை பேரிடர் என்பதால் அரசை யாரும் குறை சொல்ல கூடாது. மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் சமைத்த உணவை வழங்குவதை விட குழந்தைகளுக்காக மருந்து, பால் பவுடர், போர்வை, பெட்ஷீட், பாய், கொசுவலை ஆகியவற்றை கொடுத்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #ActorVivek

    Next Story
    ×