search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "storm affect"

    கஜா புயல் பாதிப்பில் மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். #Gajastorm #ActorVivek

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடிகர் விவேக், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை ஒரு லாரியில் நேற்று கொண்டு வந்தார். அவற்றை கலெக்டர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் இது குறித்து நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பேரிடர்களால் பாதிக்கப்படும் பொதுமக்களை அரசுதான் முழு நிவாரணம் வழங்கி மீட்க முடியும். அதற்காக நிவாரண உதவி செய்ய முன்வரும் சமூக ஆர்வலர்களை உதாசீனப்படுத்த கூடாது. அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.

     


    இயற்கை பேரிடர் என்பதால் அரசை யாரும் குறை சொல்ல கூடாது. மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் சமைத்த உணவை வழங்குவதை விட குழந்தைகளுக்காக மருந்து, பால் பவுடர், போர்வை, பெட்ஷீட், பாய், கொசுவலை ஆகியவற்றை கொடுத்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #ActorVivek

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு லாரிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குப்பட்ட பகுதிகளில் கஜா புயலால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. மேட்டாம்பட்டி, விஜயபுரம் போன்ற பகுதிகள் கடும் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்தனர்.

    சிங்கம்புணரி ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ரமேஸ்வரன் ஏற்பாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட எஸ்.புதூர் ஒன்றியத்தில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குடிநீர், மின்சாரம் இன்றி சிரமமடைந்தனர். மின்சாரம் இல்லாதததால் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் போனது. எனவே அதன் முதற்கட்டமாக மின்வாரிய ஊழியர்கள் மூலமாக மின்சாரம் வினியோகம் செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த வேலையில் விஜயபுரம் மற்றும் மேட்டாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு லாரிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. அதை பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் பிடித்து சென்றனர்.

    மேலும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் மெழுகுவர்த்திகள் வினியோகம் செய்யப்பட்டன. பின்பு சிங்கம்புணரி நேதாஜி நகர் ஜெய்ஹிந்த் பாலா, கிழத்தெரு விஜய், சுதாகர் உள்ளிட்ட இளைஞர்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    ×