என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தளவாபாளையம் அருகே கிணற்றில் விழுந்து பெண் பலி
Byமாலை மலர்23 Nov 2018 3:03 PM GMT (Updated: 23 Nov 2018 3:03 PM GMT)
தளவாபாளையம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த பெண் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே அய்யம் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மலையம்மாள் (வயது 55). இவர் அங்குள்ள பாம்பன் தோட்டத்தில் பெருமாள் என்பவரது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் மலையம்மாள் விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு கிணற்றில் மலையம்மாள் பிணமாக மிதந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் தீயணைப்புவீரர்கள் விரைந்து சென்று மலையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேலாயும்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து மலையம்மாள் எப்படி கிணற்றில் விழுந்து இறந்தார் என்று விசாரித்து வருகிறார்கள். #tamilnews
கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே அய்யம் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மலையம்மாள் (வயது 55). இவர் அங்குள்ள பாம்பன் தோட்டத்தில் பெருமாள் என்பவரது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் மலையம்மாள் விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு கிணற்றில் மலையம்மாள் பிணமாக மிதந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் தீயணைப்புவீரர்கள் விரைந்து சென்று மலையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேலாயும்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து மலையம்மாள் எப்படி கிணற்றில் விழுந்து இறந்தார் என்று விசாரித்து வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X