search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தியால்பேட்டையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    முத்தியால்பேட்டையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

    முத்தியால்பேட்டையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முரளி என்ற வெங்கட்ராமன், வியாபாரி. இவரது மனைவி சத்யகலா (வயது40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக சத்யகலா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் இவருக்கு நோய் முற்றிலும் குணமாகவில்லை. இதனால் அவர் தினந்தோறும் அவதி அடைந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சத்யகலாவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×