என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொபட் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர் பலி
Byமாலை மலர்20 Nov 2018 5:14 PM GMT (Updated: 20 Nov 2018 5:14 PM GMT)
பரமத்திவேலூர் அருகே மொபட் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 47). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் விளம்பர வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து இருந்தார்.
இவரது உறவினர் கணேசன் (59). இவரை கரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு உதயகுமார் மொபட்டில் அழைத்து சென்றார். அப்போது நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் பிரிவு சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர் கணேசன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதயகுமாரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் புதன்சந்தை அருகே உள்ள களங்காணியை சேர்ந்த துரைசாமியை (55) கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அய்யப்ப பக்தர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 47). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் விளம்பர வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து இருந்தார்.
இவரது உறவினர் கணேசன் (59). இவரை கரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு உதயகுமார் மொபட்டில் அழைத்து சென்றார். அப்போது நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் பிரிவு சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர் கணேசன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதயகுமாரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் புதன்சந்தை அருகே உள்ள களங்காணியை சேர்ந்த துரைசாமியை (55) கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அய்யப்ப பக்தர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X