என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் இன்றும் பலத்த மழை- சுருளோட்டில் 28 மி.மீ. பதிவு
Byமாலை மலர்20 Nov 2018 10:25 AM GMT (Updated: 20 Nov 2018 10:26 AM GMT)
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மிமீ மழை பெய்துள்ளது.
நாகர்கோவில்:
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் நகரமெனவும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் நேற்றிரவு கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, சுருளோடு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மி.மீ. மழை பதிவானது.
கொட்டாரம், சாமித்தோப்பு, கன்னியாகுமரி பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது.
சுசீந்திரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குலசேகரம், திற்பரப்பு, முள்ளங்கினாவிளை, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 26.40 அடியாக இருந்தது. அணைக்கு 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 656 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது. அணைக்கு 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 120 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-
பேச்சிப்பாறை-8, பெருஞ்சாணி-7.4, சிற்றாறு-1-9.8, சிற்றாறு-2-22.2, மாம்பழத்துறையாறு-3, புத்தன் அணை-8, திற்பரப்பு-24, முள்ளங்கினாவிளை-18, நிலப்பாறை-12, அடையாமடை-14, கோழிப்போர் விளை-6, மயிலாடி-15.2, பூதப்பாண்டி-2.6, சுருளோடு-28, பாலமோர்-8.4. #tamilnews
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் நகரமெனவும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் நேற்றிரவு கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, சுருளோடு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மி.மீ. மழை பதிவானது.
கொட்டாரம், சாமித்தோப்பு, கன்னியாகுமரி பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது.
சுசீந்திரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குலசேகரம், திற்பரப்பு, முள்ளங்கினாவிளை, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 26.40 அடியாக இருந்தது. அணைக்கு 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 656 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது. அணைக்கு 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 120 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-
பேச்சிப்பாறை-8, பெருஞ்சாணி-7.4, சிற்றாறு-1-9.8, சிற்றாறு-2-22.2, மாம்பழத்துறையாறு-3, புத்தன் அணை-8, திற்பரப்பு-24, முள்ளங்கினாவிளை-18, நிலப்பாறை-12, அடையாமடை-14, கோழிப்போர் விளை-6, மயிலாடி-15.2, பூதப்பாண்டி-2.6, சுருளோடு-28, பாலமோர்-8.4. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X