search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த காற்றுடன் மழை - திருச்சியில் விமான சேவை பாதிப்பு
    X

    பலத்த காற்றுடன் மழை - திருச்சியில் விமான சேவை பாதிப்பு

    கஜா புயல் காரணமாக திருச்சியில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருச்சியில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. #Rain #Gajastorm #storm #flightservice

    திருச்சி:

    கஜா புயல் காரணமாக திருச்சியில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருச்சியில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இன்று அதிகாலை 2-30மணிக்கு சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், திருச்சியில் தரையிறங்க முடியாமல் கொச்சினுக்கு திருப்பி விடப்பட்டது.

    இதே போல் சென்னையில் இருந்து திருச்சிக்கு காலை 6-25 மணிக்கு தனியார் விமானம் வரும். இன்று காலை தாமதமாக 7-15 மணிக்கு அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை நெருங்கியது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் 3 முறை வட்டமடித்தது. பின்னர் மீண்டும் தரையிறங்குவதற்காக முயற்சி மேற் கொள்ளப்பட்டது.

    ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விமானி, விமானத்தை தரையிறக்க முடியாது என கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டது. #Rain #Gajastorm #storm #flightservice

    Next Story
    ×