என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பலத்த காற்றுடன் மழை - திருச்சியில் விமான சேவை பாதிப்பு
திருச்சி:
கஜா புயல் காரணமாக திருச்சியில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருச்சியில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இன்று அதிகாலை 2-30மணிக்கு சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், திருச்சியில் தரையிறங்க முடியாமல் கொச்சினுக்கு திருப்பி விடப்பட்டது.
இதே போல் சென்னையில் இருந்து திருச்சிக்கு காலை 6-25 மணிக்கு தனியார் விமானம் வரும். இன்று காலை தாமதமாக 7-15 மணிக்கு அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை நெருங்கியது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் 3 முறை வட்டமடித்தது. பின்னர் மீண்டும் தரையிறங்குவதற்காக முயற்சி மேற் கொள்ளப்பட்டது.
ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விமானி, விமானத்தை தரையிறக்க முடியாது என கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டது. #Rain #Gajastorm #storm #flightservice
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்