search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் வாலிபரை கடத்த முயற்சி- 3 பேருக்கு வலைவீச்சு
    X

    திருச்சியில் வாலிபரை கடத்த முயற்சி- 3 பேருக்கு வலைவீச்சு

    திருச்சியில் முன்விரோத தகராறில் வாலிபரை கடத்த முயன்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 20). கட்டிட தொழிலாளி. இவரது உறவினர் காட்டுமன்னார் கோவில் ஈச்சமண்டியை சேர்ந்த பூமிநாதன். இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

    இந்நிலையில் சக்திவேல் தனது நண்பர்களுடன் கேரளாவிற்கு வேலைக்கு செல்ல திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது பூமிநாதன் மற்றும் அவரது கட்டிட மேஸ்திரி புதுக்கோட்டை மணி உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சக்திவேலை தாக்கி அவரை ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றனர். உடனே அவர் சத்தம் போட்டார். இதனால் பயந்து போன 4 பேரும் தப்பியோடி விட்டனர். 

    இது குறித்து சக்திவேல் பொன்மலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மணியை கைது செய்தனர். பூமி நாதன் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.       
    Next Story
    ×