search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை டெங்கு-பன்றி காய்ச்சலால் 13 பேர் பாதிப்பு
    X

    தஞ்சை டெங்கு-பன்றி காய்ச்சலால் 13 பேர் பாதிப்பு

    தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 82 பேர் இதுவரை டெங்கு-பன்றி காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #DenguFever #Swinflu
    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை பகுதி மட்டும் இல்லாமல் சுற்று வட்டார பகுதி மக்களும் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த நிலையில் லேசான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 82 பேர் இதுவரை காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டதால் அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் குழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

    அது போன்று 3 பெண்கள் உள்பட 6 பேர் பன்றிக்காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை சிறப்பு டாக்டர்கள் குழு தினமும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளித்து வருகின்றனர். #DenguFever #Swinflu
    Next Story
    ×