search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு முதியவர் பலி
    X

    சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு முதியவர் பலி

    சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி கள்ளிக்காட்டை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் 2 நாட்களுக்கு முன்பு ஜெயராமனை அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயராமன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

    அஸ்தம்பட்டி பகுதியில் மேலும் பலருக்கு இதே போல காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் புகார் கூறி உள்ளனர்.

    எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×