என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
நாகர்கோவில்:
இரணியலை அடுத்த பெருஞ்செல்வவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவரது மனைவி சரோஜா (வயது 66). இவர் நேற்று மாலையில் சுங்கான்கடை பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த வாலிபர் எதிர்பாராத விதமாக சரோஜா மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரோஜா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுதேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஆலஞ்சி பகுதியை சேர்ந்த ஜிபிலின் (23) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கருங்கல்லை அடுத்த திக்கனங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கீதா (65). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து மத்திக்கோடு பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் வீடு திரும்பியபோது வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்