search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி - டிரைவர் கைது
    X

    ராமநாதபுரம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி - டிரைவர் கைது

    ராமநாதபுரம் அருகே பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாழையைச் சேர்ந்தவர் முகமது நசீம் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனர். இவர், அதே பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வெளியே சென்றிருந்த முகமது நசீம், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மணக்குடி முனிஅய்யா கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள்மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முகமது நசீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்டம் பண்டாரவடையைச் சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் சர்புதீன் (36) என்பவரை கைது செய்தார்.
    Next Story
    ×