என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் அருகே சிமெண்ட் ஆலை விபத்தில் ஊழியர் மரணம்
Byமாலை மலர்4 Nov 2018 3:13 PM GMT (Updated: 4 Nov 2018 3:13 PM GMT)
அரியலூர் அருகே சிமெண்ட் ஆலை விபத்தில் ஊழியர் மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூரில் தனியார் சிமெண்ட் ஆலை உள்ளது. இங்கு இருங்கலாக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 40) என்பவர் சாம்பல் கிரசர் பெல்ட் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணியில் ஈடுபட்டிருந்த அவர், கிரசர் பெல்ட் உரசியதில் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவரை ஆலை பணியாளர்கள் மீட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார். இதனிடையே சுப்பிரமணியனின் சாவில் மர்மம் உள்ளது என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, ஆலத்தியூர் சிமெண்ட் ஆலை முன்பு, சுப்பிரமணியனின் உறவினர்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தளவாய் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X