search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே லாரி டிரைவரிடம் பணம்-செல்போன் பறிப்பு
    X

    பண்ருட்டி அருகே லாரி டிரைவரிடம் பணம்-செல்போன் பறிப்பு

    பண்ருட்டி அருகே லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றம் செல்போனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பண்ருட்டி:

    நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 33), லாரி டிரைவர். இவர் நேற்று மாலை லாரியில் பண்ருட்டியை அடுத்த ராசாபாளையம் பகுதிக்கு வந்தார். அங்கு சாலையோரம் லாரியை நிறுத்தினார். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென லாரி டிரைவர் முருகேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து முருகேசன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ்ராஜ் வழக்குபதிவு செய்து லாரி டிரைவரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றார்.
    Next Story
    ×