search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் அருகே மொபட் மீது மினிலாரி மோதி 2 பேர் பலி
    X

    ஓசூர் அருகே மொபட் மீது மினிலாரி மோதி 2 பேர் பலி

    ஓசூர் அருகே மொபட் மீது மினி லாரி மோதி 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீ மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாதப்பா (வயது 60), சின்ன எல்லப்பா (58) மற்றும் கூபல்லியப்பா (48). இவர்கள் 3 பேரும் கூலித்தொழிலாளிகள்.

    இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மொபட்டில் ஜீ மங்கலத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்றனர். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக காய்கறி பாரம் ஏற்றி சென்ற மினி லாரி இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது.

    இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாதப்பா மற்றும் சின்ன எல்லப்பா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு தொழிலாளியான கூபல்லியப்பா மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மொபட் மீது மினிலாரி மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×