என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பத்தூர் அருகே வீட்டு முன்பு விளையாடிய 7 வயது சிறுமி கடத்தல்- வாலிபர் கைது
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்செவல்பட்டி விராமதி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மகாலட்சுமி (வயது 7). இவள் அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் மகாலட்சுமி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், திடீரென்று சிறுமி மகா லட்சுமியை பைக்கில் ஏற்றி கடத்திச் சென்று விட்டார்.
இது குறித்து தந்தை ஆறுமுகம் கீழச்செவல்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் குழந்தையை கடத்தியது புதுக்கோட்டை மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த சிங்கமுத்து மகன் ராமு (26) என்பது தெரியவந்தது.
இது குறித்து ராங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ராமுவை கைது செய்தனர். அவர் எதற்காக சிறுமியை கடத்தினார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்